Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் ஜெயாவில் வெற்றி பெற்றால் 'மக்கள் தகவல் சேவை மையம்' - வேட்பாளர் எஸ். முகுந்தன் உறுதி
அரசியல்

சிரம்பான் ஜெயாவில் வெற்றி பெற்றால் 'மக்கள் தகவல் சேவை மையம்' - வேட்பாளர் எஸ். முகுந்தன் உறுதி

Share:

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், மக்களின் நலனுக்காகத் தனது தொகுதியிலேயே 'மக்கள் தகவல் சேவை மையம்' ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். முகுந்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் குறைந்த வருவாய் பெறும் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த சேவை மையத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என முகுந்தன் குறிப்பிட்டார். இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே நேரடியாகக் கொண்டு சேர்க்க இம்மையம் பாலமாகச் செயல்படும் என்பதையும் சிரம்பான் ஜெயாவில் ஐந்து முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் முகுந்தன் தெரிவித்தார்

அத்துடன் தொகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதே தனது தலையாய கடமை என்றும் அவர் உறுதியளித்தார். ஏற்கனவே சிரம்பான் மாநகர்மன்ற துணை கவுன்சிலராகப் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதால், உள்ளூர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மிகத் துல்லியமாக அறிந்து, அவற்றை விரைந்து களைவதில் தம்மால் மிகச் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்றும் எஸ். முகுந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

லிங்கி தொகுதி: இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு சாதகமான சூழல்

லிங்கி தொகுதி: இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூனுக்கு சாதகமான சூழல்

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சாட்டையடி கொடுக்க  வேண்டும்

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு