Oct 25, 2025
Thisaigal NewsYouTube
நான்கரை நாட்கள் வேலை என்பது மாநில அரசின் முடிவில் உள்ளது
அரசியல்

நான்கரை நாட்கள் வேலை என்பது மாநில அரசின் முடிவில் உள்ளது

Share:

நவ. 24-

ஜோகூர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான வேலை நாட்களை நான்கரைநாட்கள் வரையறை எனும் முன்மொழிவு குறித்து மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசின் பிரதமர் துறையின் சட்ட, நிறுவன சீர்திருத்தப் பிரிவுக்கான அமைச்சர், அசலினா ஒத்மான் சைத் கூறுகையில், இந்த முடிவை எடுப்பதற்கு முன் மாநில அரசாங்கம் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் என்று கூறினார்.

இந்த முன்மொழிவு குறித்து மேலும் விவரங்கள் இல்லாததால், தாம் மேலும் கருத்துரைக்க இயலவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், மாநில அரசாங்கம் இந்த முடிவுக்கு வர கட்டாயமான காரணங்கள் இருக்கும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேலை நேரங்கள் மாறி வருகின்றன என்றும், பலர் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த முன்மொழிவு, பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, குறைந்த வேலை நேரம் தொழிலாளர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் ஆக்கத்தித்திறனை அதிகரிக்கிறது. மேலும், இது நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும் என்றார் அவர்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்