Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்

Share:

சிலாங்கூர் மாநில 22 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக விரைவில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு தலா 50 ஆயிரம் வெள்ளியை மாநில அரசு வழங்கும் என அவர் கூறினார்.

தாம் வாய்மொழியாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அவர்களிடம் இருந்து இன்னும் விண்ணம் வரவில்லை. எனவே, தம்மை அவர்கள் நேரில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டுக்கான இந்த நிதி ஒதுக்கீட்டை தேவையின் காரணமாக முன்னதாகவே கொடுப்பதாகவும், அதனை அவர்கள் திட்டமிட்டு மக்கள் நலனுக்காகச் செலவிடுவர் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சமயம், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டை முடிவு செய்ய ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு