உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர்சலாஹுதியோன் அயூப் ப்பின் திடீர் மறைவு, மக்களின் நலனுக்காக போராடி வந்த ஒரு முக்கியத் தலைவரை நாடு இழந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் என்ற முறையில் சலாஹுதியோன் அயூப் ப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை மிக அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளார்.குறிப்பாக, வசதி குறைந்த மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கொண்டு வரப்பட்ட 5 வெள்ளி மெனு ரஹ்மா உணவுத்திட்டத்தை முழு வீச்சில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் சலாஹுதியோன் அயூப் ஈடுபட்டு வந்தார். சலாஹுதியோன் அயூப் தமது நண்பர் மட்டுமல்ல, நாட்டின் ஒரு பகுதியாக அவர் இருந்தத்தைப் போல ஓர் உணர்வு மேலிடுகிறது என்று தமது இரங்கல் செய்தியில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


