Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மன்னிப்பு வாரியத்தின் முடிவு டத்தோ ஶ்ரீ நஜீப் பெரும் ஏமாற்றம்
அரசியல்

மன்னிப்பு வாரியத்தின் முடிவு டத்தோ ஶ்ரீ நஜீப் பெரும் ஏமாற்றம்

Share:

தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத்தண்டனையை 6 ஆண்டுக்காலமாக குறைத்திருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவை அறிந்து முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதனை டத்தோ ஶ்ரீ நஜீப்பின் புதல்வி Nooryana Najwa தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை தமது தந்தை நஜிப்பை பார்ப்பதற்கு சிறைச்சாலைக்கு சென்ற போது அவர் இத்தகைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக Nooryana குறிப்பிட்டார்.

தமது தந்தையை பார்க்க செல்லும் போது அவர் கையில் ஒரு கடிதத்தை வைத்திருந்ததாக Nooryana விளக்கினார்.

அந்த கடிதம் மன்னிப்பு வாரியத்தின் கடிதமாகும். தமது தந்தையை நலம் விசாரித்தபோது அவர் மிகச் சோர்வாக காணப்பட்டதாக Nooryana மேலும் கூறினார்.

மன்னிப்பு வாரியத்தின் முடிவு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று Nooryana விவரித்தார்.

முகம் களையிழந்து காணப்பட்டது. மிகவும் சோர்வாகவேதான் இருந்தார். மன்னிப்பு வாரியத்தின் முடிவை கேட்டு தூக்கமின்றி இருந்ததாக தெரிகிறது.

எனினும், அவருக்கு ஆறுதல் கூறி மனதை தேர்த்தியதாக Nooryana Najwa தமது instagram அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்