நெகிரி செம்பிலான், மம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் குமரவேல் ராமையா, மம்பாவ் தொகுதி, ஒரு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு தொகுதியாக விளங்கிட மக்களுக்காக சேவையாற்றி முன் வந்துள்ள தம்மை சட்டமன்ற மன்ற உறுப்பினராக தேர்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் 51 வயது குமரவேல், மம்பாவ் தொகுதியில் முன்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மம்பாவ் தொகுதியில் போட்டியிடும் தாம் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுவதாக முதுகலைப்பட்டப்படிப்பை முடித்தவரான குமரவேல் கூறுகிறார்.
ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும் சீனம் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றலைக் கொண்டுள்ள குமரவேல், ஒரே சின்னத்திற்கு வாக்களிக்கும் நமது மூதாதையரின் அடிச்சுவட்டை பின்பற்றாமல் இளையோர்களுக்காக சேவையாற்ற முன்வந்துள்ள தம்மைப் போன்றவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு மம்பாவ் தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


