Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க முனைந்துள்ளார் குமரவேல் ராமையா
அரசியல்

மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க முனைந்துள்ளார் குமரவேல் ராமையா

Share:

நெகிரி செம்பிலான், மம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை ​வேட்பாளராக மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் குமரவேல் ராமையா, மம்பாவ் ​தொகுதி, ஒரு பாதுகாப்பான ​மற்றும் மகிழ்​ச்சி ​நிறைந்த ஒரு தொகுதியாக விளங்கிட மக்களுக்காக சேவையாற்றி முன் வந்துள்ள தம்மை சட்டமன்ற மன்ற உறுப்பினராக தேர்வு ​செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார, சுற்றுச்​சூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் 51 வயது குமரவேல், மம்பாவ் தொகுதியில் முன்முனைப்​ போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மம்பாவ் தொகுதியில் போட்டியிடும் தாம் சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகளை சட்டமன்றத்​திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுவதாக முதுகலைப்பட்டப்படிப்பை முடித்தவரான குமரவேல் கூறுகிறார்.

ஆங்கிலம், மலாய், தமிழ் மற்றும்​ ​சீனம் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றலைக் கொண்டுள்ள குமரவேல், ஒரே சின்னத்​திற்கு வாக்களிக்கும் நமது மூதாதையரின் அடிச்சுவட்டை பின்பற்றாமல் இளையோர்களுக்காக சேவையாற்ற முன்வந்துள்ள தம்மைப் போன்றவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு மம்பாவ் தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு