கெடா மந்திரி பெசார் சனூசிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்,நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு , குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அவர் குற்றவாளி அல்ல என்று கெடா மாநில பாஸ் கட்சி அறிவித்துள்ளது. சனூசியை இறைவன் காப்பான். அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர் அஹ்மாட் யஹாயா தெரிவித்தார்.
ஒருவர் குற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதியே என்ற கொள்கையை பாஸ் கட்சி உறுதியாக கடைப்பிடிக்கிறது. சனூசிக்கு எதிரான வழக்கு விசாரணையில் எந்தவொரு அரசியல் நெருக்குதல் அளிக்கப்படக்கூடாது என்று பாஸ் கட்சி நம்புவதாக அஹ்மாட் யஹாயா குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


