கெடா மந்திரி பெசார் சனூசிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்,நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு , குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அவர் குற்றவாளி அல்ல என்று கெடா மாநில பாஸ் கட்சி அறிவித்துள்ளது. சனூசியை இறைவன் காப்பான். அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர் அஹ்மாட் யஹாயா தெரிவித்தார்.
ஒருவர் குற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதியே என்ற கொள்கையை பாஸ் கட்சி உறுதியாக கடைப்பிடிக்கிறது. சனூசிக்கு எதிரான வழக்கு விசாரணையில் எந்தவொரு அரசியல் நெருக்குதல் அளிக்கப்படக்கூடாது என்று பாஸ் கட்சி நம்புவதாக அஹ்மாட் யஹாயா குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


