கெடா மந்திரி பெசார் சனூசிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்,நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு , குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அவர் குற்றவாளி அல்ல என்று கெடா மாநில பாஸ் கட்சி அறிவித்துள்ளது. சனூசியை இறைவன் காப்பான். அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர் அஹ்மாட் யஹாயா தெரிவித்தார்.
ஒருவர் குற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதியே என்ற கொள்கையை பாஸ் கட்சி உறுதியாக கடைப்பிடிக்கிறது. சனூசிக்கு எதிரான வழக்கு விசாரணையில் எந்தவொரு அரசியல் நெருக்குதல் அளிக்கப்படக்கூடாது என்று பாஸ் கட்சி நம்புவதாக அஹ்மாட் யஹாயா குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
