Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமா
அரசியல்

பிகேஆர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமா

Share:

கோலாலம்பூர், மே.03-

இன்று மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டதற்கு , கட்சியின் துணைத் தலைவர் ரஃபி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமாகும் என்று கூறப்படுவதை தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா மறுத்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கும், ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பதற்கும் அறவே தொடர்பில்லை என்று பிரதமர் துறை அமைச்சரான டாக்டர் ஸாலிஹா தெளிவுபடுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைப் போல் ரஃபிஸி ரம்லி, விடுமுறையில் இருப்பது வழக்கமான ஒன்றாகும் என்பதை டாக்டர் ஸாலிஹா விளக்கினார்.

பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கட்சியின் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி திடீரென்று விடுமுறையில் சென்று இருப்பது கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது