Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமா
அரசியல்

பிகேஆர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமா

Share:

கோலாலம்பூர், மே.03-

இன்று மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டதற்கு , கட்சியின் துணைத் தலைவர் ரஃபி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமாகும் என்று கூறப்படுவதை தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா மறுத்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கும், ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பதற்கும் அறவே தொடர்பில்லை என்று பிரதமர் துறை அமைச்சரான டாக்டர் ஸாலிஹா தெளிவுபடுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைப் போல் ரஃபிஸி ரம்லி, விடுமுறையில் இருப்பது வழக்கமான ஒன்றாகும் என்பதை டாக்டர் ஸாலிஹா விளக்கினார்.

பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கட்சியின் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி திடீரென்று விடுமுறையில் சென்று இருப்பது கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!