பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஓர் இக்கட்டான நிலையை சந்திக்க நேரிடும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். மலேசிய அரசியல் வடிவமைப்பில் சித்தாந்த ரீதியாக ஓர் இக்கட்டான நிலைமையை பிரதமர் எதிர்நோக்கக்கூடும். இது மலேசிய அரசியல் நீரோடையில் தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்று கைரி ஜமாலுடின் ஆருடம் கூறுகிறார். இந்த நெருக்கடியான சூழலில் அன்வார், தமது முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வாரா? அல்லது டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பிற்போக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தப் போகின்றாரா? என்று கைரி ஜமாலுடின் வினவினார். தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவை மேலும் திரட்டவதற்கான அன்வாரின் முன்னெடுப்புகள் பலன் அளிக்கவில்லை என்பதையே அண்மைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கைரி குறிப்பிட்டடார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


