பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஓர் இக்கட்டான நிலையை சந்திக்க நேரிடும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். மலேசிய அரசியல் வடிவமைப்பில் சித்தாந்த ரீதியாக ஓர் இக்கட்டான நிலைமையை பிரதமர் எதிர்நோக்கக்கூடும். இது மலேசிய அரசியல் நீரோடையில் தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்று கைரி ஜமாலுடின் ஆருடம் கூறுகிறார். இந்த நெருக்கடியான சூழலில் அன்வார், தமது முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வாரா? அல்லது டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பிற்போக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தப் போகின்றாரா? என்று கைரி ஜமாலுடின் வினவினார். தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவை மேலும் திரட்டவதற்கான அன்வாரின் முன்னெடுப்புகள் பலன் அளிக்கவில்லை என்பதையே அண்மைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கைரி குறிப்பிட்டடார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


