பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஓர் இக்கட்டான நிலையை சந்திக்க நேரிடும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். மலேசிய அரசியல் வடிவமைப்பில் சித்தாந்த ரீதியாக ஓர் இக்கட்டான நிலைமையை பிரதமர் எதிர்நோக்கக்கூடும். இது மலேசிய அரசியல் நீரோடையில் தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்று கைரி ஜமாலுடின் ஆருடம் கூறுகிறார். இந்த நெருக்கடியான சூழலில் அன்வார், தமது முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வாரா? அல்லது டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பிற்போக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தப் போகின்றாரா? என்று கைரி ஜமாலுடின் வினவினார். தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவை மேலும் திரட்டவதற்கான அன்வாரின் முன்னெடுப்புகள் பலன் அளிக்கவில்லை என்பதையே அண்மைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கைரி குறிப்பிட்டடார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


