பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஓர் இக்கட்டான நிலையை சந்திக்க நேரிடும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். மலேசிய அரசியல் வடிவமைப்பில் சித்தாந்த ரீதியாக ஓர் இக்கட்டான நிலைமையை பிரதமர் எதிர்நோக்கக்கூடும். இது மலேசிய அரசியல் நீரோடையில் தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்று கைரி ஜமாலுடின் ஆருடம் கூறுகிறார். இந்த நெருக்கடியான சூழலில் அன்வார், தமது முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வாரா? அல்லது டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பிற்போக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தப் போகின்றாரா? என்று கைரி ஜமாலுடின் வினவினார். தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு மலாய்க்காரர்களின் ஆதரவை மேலும் திரட்டவதற்கான அன்வாரின் முன்னெடுப்புகள் பலன் அளிக்கவில்லை என்பதையே அண்மைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கைரி குறிப்பிட்டடார்.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


