மலேசிய குடிநுழைவு துறையின் MyIMMs கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி, தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதி விண்ணப்பங்களுக்கு, விதிமுறைகளை மீறி ஒப்புதல் வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில், மேலும் 5 குடிநுழைவு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர், வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தலைமையகத்திற்கு வந்தபோது 'Ops Crack' நடவடிக்கையின் கீழ் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்காக அவர்களிடம் இருந்த 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுவரை 17 பேரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 9 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஜூலை 28-ஆம் தேதி 6 குடிநுழைவு அதிகாரிகள், ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








