Mar 6, 2026
Thisaigal NewsYouTube
30 கோடி ரிங்கிட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
அரசியல்

30 கோடி ரிங்கிட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், டிச. 19-


இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 30 கோடியே
20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகளை நாட்டிலுள்ள நிதிக் கழகங்கள் முடக்கியுள்ளன என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

இணைய வழி வங்கி பயன்பாட்டில், பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பேங்க் நெகாராவின் மேற்பார்வையில் நிதிக்
கழகங்கள் அமல்படுத்திய ஐந்து முதன்மை தடுப்பு நடவடிக்கைளின் வாயிலாக நேர்மறையான பலன் கிடைத்துள்ளதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு 38 கோடியே 30 லட்சம் ரிங்கிட் வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளையும்
இவ்வாண்டு செப்டம்பர் வரை 30 கோடியே 20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகளும் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளன என்று லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போது செனட்டர் போபி சுவான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி