Mar 4, 2026
Thisaigal NewsYouTube
சபா சட்டமன்றத் தேர்தல்:  நாளை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்குப்பதிவு
அரசியல்

சபா சட்டமன்றத் தேர்தல்: நாளை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்குப்பதிவு

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.24-

சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலையொட்டி நாளை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறுகிறது. முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பில், 24 ஆயிரத்து 426 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.

முன்கூட்டியே வாக்களிப்பவர்களில் 11 ஆயிரத்து 697 பேர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும், 12 ஆயிரித்து 729 பேர் போலீசார் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும் ஆவர்.

நாளை காலை 8 மணியளவில் சபா மாநிலம் முழுவதும் 58 மையங்களில் முன்கூட்டியே வாக்குப் பதிவு டைபெறும்.

இந்த வாக்களிப்பு மையங்கள் யாவும், போலீஸ் தலைமையகம் மற்றும் இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன.

முன்கூட்டியே பதிவு செய்யப்படும் வாக்குகள், வரும் 29 ஆம் தேதி நடைபெறும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு பெற்றப் பின்னர் ஒருங்கிணைந்து எண்ணப்படும் என்று எஸ்பிஆர் அறிவித்துள்ளது.

சபா சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் இம்முறை 73 தொகுதிகளில் 596 பேர் போட்டியிடுகின்றனர். பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்