பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் வெற்றிக்கு பின்னர் இரண்டாவது தவணையாக தாம் முதலமைச்சராக பதவியேற்பதை தடுப்பதற்கு இப்போதே சதி வேலைகள் நடந்த வருவதாக கூறப்படுவதை மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சொவ் கொன் யொவ் மறுத்துள்ளார். தாம் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதை விரும்பாத குறிப்பட்ட கும்பல், அதனை தடுப்பதற்கு தற்போது களம் இறங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சொவ் கொன் யொவ் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு புதியவர்களை கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து மட்டுமே தமது கவனத்தில் இருப்பதாக 65 வயதான சொவ் கொன் யொவ் தெரிவித்தார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


