Dec 23, 2025
Thisaigal NewsYouTube
2023 பட்ஜெட்டில் இதுவரை 49% செலவிடப்பட்டுள்ளது என்றார் அன்வார்
அரசியல்

2023 பட்ஜெட்டில் இதுவரை 49% செலவிடப்பட்டுள்ளது என்றார் அன்வார்

Share:

2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 18 ஆயிரத்து 800 கோடி வெள்ளி செலவிடப்பட்டு விட்டது
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு 2023 ஆம் ஆண்டுக்கான 38 ஆயிரத்து 614 கோடி வெள்ளி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஜுன் மாதம் வரையில் 18 ஆயிரத்து 800 கோடி வெள்ளி செலவிடப்பட்டு விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

இதுவரையில் செலவிடப்பட்ட தொகையானது, மொத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் 49 விழுக்காடாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய தொகையாகும் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு, இந்த அளவிற்கு விரைவாகவும், மிகத் துரிதமாகவும் பட்ஜெட் நிதி பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

எனினும் செலவிடப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் தாம் மனநிறைவு கொள்ளவில்லை என்றும், ஜுன் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 60 விழுக்காடு தொகை பட்டுவாடா செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு