கோலாலம்பூர், ஜனவரி.03-
நாட்டில் மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக, அம்னோ மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சால்லே இன்று நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் பிரிவினைகளால் மலாய்க்காரர்களின் அதிகாரம் சிதறடிக்கப்படுவதைத் தவிர்க்க, 'முவாபாக்காட் நேஷனல்' (Muafakat Nasional) போன்றதொரு கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பதே ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ அங்கம் வகித்தாலும், அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் எதிர்காலப் பயணம் குறித்து முடிவெடுக்க இன்று அக்மால் சால்லே தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், பாஸ் கட்சியுடன் இணைவது குறித்த அக்மாலின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர, அம்னோ கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என்று அம்னோ தலைமைத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது.








