Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே, தமது இலக்கு! ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வாக்குறுதி
அரசியல்

நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே, தமது இலக்கு! ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வாக்குறுதி

Share:

கோலாலம்பூர், ஜூன் 13-

வரவிருக்கும் சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், தாம் வெற்றி பெற்றால், அத்தொகுதியில் நிலவிவரும் நீர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் ஜோஹரி அரிஃபின் வாக்குறுதி அளித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித தீர்வுகளும் இன்றி நீடித்துவரும் அப்பிரச்சனைக்கு, கூட்டரசு அரசாங்கம் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்துள்ளதை, தாம் ஓர் அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பக்காப் தொகுதியில், வீடமைப்பு திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில், நீர் விநியோகத்தின் அளவு இன்னமும் சிறிதாகவே இருந்துவருகின்றது.

அப்பிரச்சனைக்கு தீர்வு காண, மறைந்த நோர் ஜம்ரி லத்தீஃப் உள்பட இதற்கு முந்தைய சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்திருந்த முன்னெடுப்பை தாம் தொடரப்போவதாகவும் ஜூஹாரி குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்