தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க மலேசியா தவறுமானால் அது சுக்கு நூறாகிவிடும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள உறுப்புக்கட்சிகளும் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று 101 East Al Jazeera விற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் அன்வார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனவா? என்று எழுப்பட்ட கேள்விக்கு ஆம் என்று அன்வார் பதில் அளித்துள்ளார்.
தாம் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமர். அந்த வகையில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு தாமும் தயாராகி வருவதாக அன்வார் தமது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


