வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள, பாஸ் கட்சியானது அம்னோவுடன் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கட்சியின் 'நிஸ்மிலான் கீத்தோ ஜாகோ' தேர்தல் பிரசார தொடக்க விழா மற்றும் நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்ட அவர், தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் மலாய்-முஸ்லிம் தலைமையிலான அரசை அமைப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து விளக்கமளித்த அவர், கடந்த 2023 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அம்னோ வென்ற 14 தொகுதிகளை அக்கட்சி தக்கவைத்துக் கொள்ளும் என்றும் பாஸ் தாம் வென்ற 3 தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மீதமுள்ள தொகுதிகள் இரு கட்சிகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணி வெற்றி பெற்றால் மந்திரி பெசார் பதவியில் PAS-க்கு விருப்பமில்லை என்பதையும் ஹாடி உறுதிப்படுத்தியுள்ளார்.








