Jul 10, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தலில் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் – முதலாளிகளுக்கு தேர்தல் ஆணையம் நினைவூட்டல்
அரசியல்

ஜோகூர் தேர்தலில் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் – முதலாளிகளுக்கு தேர்தல் ஆணையம் நினைவூட்டல்

Share:

நாளை ஜோகூரில் நடைபெறவுள்ள 16-வது மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள ஊழியர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கு போதுமான நேரம் வழங்குமாறு முதலாளிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்ல போதுமான நேரம் வழங்காமல் இருக்கக்கூடும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 1954-ஆம் ஆண்டின் தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 25-இன் விதிமுறைகளை அனைத்து முதலாளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கைருல் வலியுறுத்தியுள்ளார்.

வாக்களிக்கச் செல்வதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது, ஊதியத்தை குறைப்பது அல்லது வேறு எந்த வகையிலும் தண்டனை விதிப்பது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகிய ஊழியர்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு முதலாளிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற தாய்லாந்து பிரதமர் அனுதின் வாழ்த்து

ஜோகூர் தேர்தல்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற தாய்லாந்து பிரதமர் அனுதின் வாழ்த்து

ஜோகூர் தேர்தல்: இனவாதப் போக்குகள் கவலையளிக்கின்றன எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை!

ஜோகூர் தேர்தல்: இனவாதப் போக்குகள் கவலையளிக்கின்றன எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை!

நியமனச் சட்டமன்ற உறுப்பினர் முறையை ரத்து செய்யப் போராடுவேன்: பெக்கான் நானாஸ் பக்காத்தான்  வேட்பாளர் உறுதி

நியமனச் சட்டமன்ற உறுப்பினர் முறையை ரத்து செய்யப் போராடுவேன்: பெக்கான் நானாஸ் பக்காத்தான் வேட்பாளர் உறுதி

கல்வி ஒன்றே வறுமையை ஒழிக்கும் ஆயுதம்: பெக்கோக் தொகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர் டே யோக் ஜியுன் உருக்கமான வேண்டுகோள்

கல்வி ஒன்றே வறுமையை ஒழிக்கும் ஆயுதம்: பெக்கோக் தொகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர் டே யோக் ஜியுன் உருக்கமான வேண்டுகோள்

வாக்களிக்கச் செல்லும் ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை அல்லது நேர அனுமதி வழங்க வேண்டும்: முதலாளிகளுக்கு கேஎல்எஸ்சிஏஎச் மற்றும் பெர்சே உள்ளிட்ட கூட்டமைப்புகள் கோரிக்கை

வாக்களிக்கச் செல்லும் ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை அல்லது நேர அனுமதி வழங்க வேண்டும்: முதலாளிகளுக்கு கேஎல்எஸ்சிஏஎச் மற்றும் பெர்சே உள்ளிட்ட கூட்டமைப்புகள் கோரிக்கை

பக்காத்தான் ஹராப்பானின் 10 அம்ச வாக்குறுதிகள் ஜோகூர் மக்களின் விடியலுக்கு அஸ்திவாரம்: சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு நம்பிக்கை!

பக்காத்தான் ஹராப்பானின் 10 அம்ச வாக்குறுதிகள் ஜோகூர் மக்களின் விடியலுக்கு அஸ்திவாரம்: சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு நம்பிக்கை!