ஜோகூரில் நடைபெறவிருக்கும் ம் மாநிலத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கட்சி வெற்றி பெற தாய்லாந்து பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இரு நாட்டுப் பிரதமர்களின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் நிறைவில் பக்கத்தான் ஹரப்பான் தலைவரான அன்வாருக்கு இந்த நல்வாழ்த்துகளைக் கூறினார்.
அனுதினுடனான சந்திப்பு மிகவும் சுமுகமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக விவரித்த டத்தோஸ்ரீ அன்வார் , தாய்லாந்து மலேசியாவின் மிக முக்கியமான நட்பு நாடு என்றும் குறிப்பிட்டார்.








