Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு முதலமைச்சராக தமது தவணைக் காலத்தை முடிப்பார்
அரசியல்

பினாங்கு முதலமைச்சராக தமது தவணைக் காலத்தை முடிப்பார்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 04-

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு மாநில டிஏபி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பினாங்கு டிஏபி தலைவர் சௌ கோன் இயோவ் அறிவித்த போதிலும், அவர் மாநில முதலமைச்சராக தனது தவணைக்காலம் முடியும் வரையில் அப்பொறுப்பில் இருப்பார் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

சௌ கோன் இயோவ் - வின் இந்த முடிவு, பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை பாதிக்காது. காரணம், முதலமைச்சர் என்ற முறையில் தனது தவணைக் காலத்தை அவர் முழுமையாக நிறைவு செய்வார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கு மாநில அரசியமைப்புச் சட்டத்தின்படி முலமைச்சராக பொறுப்பு வகிப்பவர், கூடிய பட்சம் இரண்டு தவணைக்காலம் மட்டுமே அப்பொறுப்பில் இருக்க முடியும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

பினாங்கு மாநிலத்தில் ஐந்தாவது முதலமைச்சராக கடந்த 2018 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பதங் கோட்டா சட்டமன்ற உறுப்பினரான 65 வயது சௌ கோன் இயோவ் , கடந்த 25 ஆண்டு காலமாக பினாங்கு மாநில டிஏபி- க்கு தலைமையேற்று வருகிறார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்