Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் என்னுடைய குடும்பக் கட்சி என்று முத்திரைக் குத்துவதா? சாடினார் டத்தோஸ்ரீ அன்வார்
அரசியல்

பிகேஆர் என்னுடைய குடும்பக் கட்சி என்று முத்திரைக் குத்துவதா? சாடினார் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

ஜோகூர் பாரு, மே.24-

பிகேஆர் கட்சி, தனது மனைவி மற்றும் மகளின் கட்சி என்று தனது குடும்பக் கட்சியாக முத்திரைக் குத்தி வரும் தரப்பினரைக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாகச் சாடினார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தேர்தலில் தனது மகள் நூருல் இஸா, கட்சியின் புதியத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது மூலம், பிகேஆர் ஒரு குடும்பக் கட்சி என்று முத்திரைக் குத்துப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதாக பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பிகேஆர் இன்று வளர்ந்து விட்டது. அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. அதன் தலைவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்பதற்காக மனம் போன போக்கில், பிகேஆர் ஒரு குடும்பக் கட்சி என்று முத்திரை குத்த வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

அன்று நான், சிறையில் வைக்கப்பட்ட போது, அந்த நெருக்கடி மிகுந்த தருணங்களில் கட்சியை யார் வழிநடத்தியது? யார் கட்சியினை முன்னெடுத்துக் கொண்டுச் சென்றது? கட்சியைப் புத்துணர்ச்சியுடன் வழி நடத்தியது யார்? என்று டத்தோஸ்ரீ அன்வார் வினவினார்.

கெஅடிலான் நேஷனல் என்ற கட்சியை பிகேஆர் என்று பெயரிடப்பட்டு, அதன் வேகமும் தாக்கமும் குறையாமல் வழிநடத்தி வந்த கட்சியின் அன்றைய தலைவரும், தனது துணைவியாருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், கட்சிக்குத் தலைமையேற்றிருந்த போது, பிகேஆர் ஒரு குடும்பக் கட்சி என அன்று கண்களுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி கேட்கும் நபர்களை நோக்கி டத்தோஸ்ரீ அன்வார் பாய்ந்தார்.

1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நீதிக்கட்சியைத் தொடர்ந்து வழிநடத்தி, என்னிடம் ஒப்படைத்து, பெரும் பங்காற்றிய பிகேஆர் முன்னாள் தலைவரும், தனது துணைவியாருமான வான் அஸிஸாவிற்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இன்று பிகேஆர் மாநாட்டில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!