இன்று நடைபெறும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, 56 இடங்களில் குறைந்த பட்சம் 40 இடங்களை வெல்லும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். புக்கிட் அந்தரா பங்சா, லம்பா ஜெயா, சுங்கை துவா, தாமன் மேடன், போர்ட் கிளாங் ஆகிய கடுமையான தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் டிங்கில், பத்தாங் காலி ஆகிய தொகுதிகளும் அடங்கும்.வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்து விட்டார்கள். சிலாங்கூர் மாநிலத்தை நான்காவது தவணையாக தற்காத்துக்கொள்வது உறுதி என்று அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


