இன்று நடைபெறும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, 56 இடங்களில் குறைந்த பட்சம் 40 இடங்களை வெல்லும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். புக்கிட் அந்தரா பங்சா, லம்பா ஜெயா, சுங்கை துவா, தாமன் மேடன், போர்ட் கிளாங் ஆகிய கடுமையான தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் டிங்கில், பத்தாங் காலி ஆகிய தொகுதிகளும் அடங்கும்.வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்து விட்டார்கள். சிலாங்கூர் மாநிலத்தை நான்காவது தவணையாக தற்காத்துக்கொள்வது உறுதி என்று அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


