இன்று நடைபெறும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி, 56 இடங்களில் குறைந்த பட்சம் 40 இடங்களை வெல்லும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். புக்கிட் அந்தரா பங்சா, லம்பா ஜெயா, சுங்கை துவா, தாமன் மேடன், போர்ட் கிளாங் ஆகிய கடுமையான தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் டிங்கில், பத்தாங் காலி ஆகிய தொகுதிகளும் அடங்கும்.வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்து விட்டார்கள். சிலாங்கூர் மாநிலத்தை நான்காவது தவணையாக தற்காத்துக்கொள்வது உறுதி என்று அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


