நாடு இதுவரையில் தற்காத்து கொண்டிருக்கும் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அடுத்த தலைமுறையினராக இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim வலியுறுத்தினார்.
பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய போராட்டவாதிகளின் சேவைகள் எப்போதும் நினைவுக்கூறப்பட வேண்டும் என்று Johor, Angsana Johor Bahru Mall - லில் நேற்று இரவு நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை வார கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின், தமது உரையில் பிரதமர் அன்வார் இதை தெரிவித்தார்.
இளைஞர்கள், நாட்டின் ஒற்றுமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காரணம், சமுதாயத்தின் ஒற்றுமை ஒரு நாட்டை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் அதே வேளையில் இன மக்களிடையே பிளவு ஏற்பட்டால் அது நாட்டை சீர்குலைக்க வித்திடும் என்று அவர் கூறினார்.
இன ஒற்றுமையே நாட்டின் பலம் என்று பேசிய பிரதமர் அன்வார், ஒற்றுமையை எப்போதும் ஆதரிப்பதற்காக மலேசியர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.








