- டாக்டர் அகமட் ஜாஹிட் அதிரடி அறிவிப்பு
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் போட்யிடப்போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகா மற்றும் மசீச. ஆகிய கட்சிகளின் முடிவை மதிப்பதாக பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மஇகா மற்றும் மசீச.விற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அக்கட்சிகளுக்கு பதிலாக பாரிசான் நேஷனலின் மற்ற உறுப்புக்கட்சிகள் போட்டியிடும் என்று அஹ்மாட் ஸாஹிட் அதிரடியாக அறிவித்துள்ளார்.
எனினும் மஇகாவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பாரிசான் நேஷனலின் தோழமைக்கட்சியான டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி, ஐ.பி.எப். போன்ற கட்சிகள் போட்டியிடுமா? என்பதை ஸாஹிட் விளக்கவில்லை.
ஆனால், அத்தொகுதிகளில் பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகும் என்று ஸாஹிட் விளக்கினார்.