நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது முறையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சேவ் யோங், இன்று காலையிலேயே சிரம்பான், புக்கிட் மேவா இடைநிலைப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.
லோபாக் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக போட்டியிடும் சியு சேவ் யோங், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் கெராக்கான் வேட்பாளர் இங் சூன் யோங் கிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். வாக்களிப்பதற்கு முன்னதாக லோபாக் தொகுதில் வாக்களிப்பு மையங்களில் திரண்டிருந்த மக்களை சந்தித்து சியு சேவ் யோங் கைக்குலுக்கினார். இம்முறை காலையிலேயே அதிகமானோர் வாக்களிக்க திரண்டு இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சியு சேவ் யோங் தெரிவித்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


