நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது முறையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சேவ் யோங், இன்று காலையிலேயே சிரம்பான், புக்கிட் மேவா இடைநிலைப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.
லோபாக் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக போட்டியிடும் சியு சேவ் யோங், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் கெராக்கான் வேட்பாளர் இங் சூன் யோங் கிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். வாக்களிப்பதற்கு முன்னதாக லோபாக் தொகுதில் வாக்களிப்பு மையங்களில் திரண்டிருந்த மக்களை சந்தித்து சியு சேவ் யோங் கைக்குலுக்கினார். இம்முறை காலையிலேயே அதிகமானோர் வாக்களிக்க திரண்டு இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சியு சேவ் யோங் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


