நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது முறையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சேவ் யோங், இன்று காலையிலேயே சிரம்பான், புக்கிட் மேவா இடைநிலைப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.
லோபாக் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக போட்டியிடும் சியு சேவ் யோங், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் கெராக்கான் வேட்பாளர் இங் சூன் யோங் கிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். வாக்களிப்பதற்கு முன்னதாக லோபாக் தொகுதில் வாக்களிப்பு மையங்களில் திரண்டிருந்த மக்களை சந்தித்து சியு சேவ் யோங் கைக்குலுக்கினார். இம்முறை காலையிலேயே அதிகமானோர் வாக்களிக்க திரண்டு இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சியு சேவ் யோங் தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


