Jun 28, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சராகி விட்டாதால் கட்சியை மறந்து விட வேண்டாம்
அரசியல்

அமைச்சராகி விட்டாதால் கட்சியை மறந்து விட வேண்டாம்

Share:

தற்போது ஆட்சியில் இருந்தாலும் கட்சியை பலப்படுத்த ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என அமானா கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் சாபு தெரிவித்தார்.

ஏனென்றால், கட்சியின் பலமே தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும், ஆட்சியில் இருக்கும் பதவி அல்ல என்றார் அவர்.

UMNO, தேசிய முன்னணி ஆகியவற்றின் வரலாற்றைச் சுட்டிக் காட்டிய மாட் சாபு, அவை வலுவான கட்சிகளாக இருந்தாலும், 2018, 2022 தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கின்றன. எனவே அரசாங்கத்தில் இருப்பது ஒரு வலுவான கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

14 வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றிஉந்தாலும், அதற்கடுத்து வந்த இடைத்தேர்தலில் தோல்வியையும் தழுவி இருந்தது.

ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ என்பது வெற்றிக்கு தீர்க்கமானதல்ல, கட்சியின் பலத்திற்கு முக்கியமானது என்பதையே நிலைமை தெளிவாகக் காட்டுகிறது என்றார்.

எனவே, தாங்கள் அரசாங்கமாகி அமைச்சராகும்போதும், துணை அமைச்சர்களாக நியமிக்கப்படும் போதும், ஜி எல் சி யில் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போதும், கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என மாட் சாபு சொன்னார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி