அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனல் கூட்டணியும் வெற்றி பெறுமானால் மந்திரி புசார் என்ற முறையில் மாநிலத்திற்கு தொடர்ந்து தலைமையேற்கப் போவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோடி காட்டியுள்ளார். சிலாங்கூர் மாநில மக்களின் நல்வாழ்வை தொடர்ந்து உறுதி செய்வதற்கும், மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடவும் மந்திரி புசார் பதவியை தொடர்ந்து வகிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். எனினும் சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்துவது என்பது கூட்டுப்பணியே தவிர தமது தனியொரு நபரின் பணி மட்டும் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


