Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்
அரசியல்

அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

மலேசியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் நிதி மசோதாவின் கீழ், அரசியல் கட்சிகள் தங்களின் நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்ட சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் உரையாற்றிய குலசேகரன், இந்த மசோதாவில் இடம் பெறக்கூடிய இதர முக்கிய பரிந்துரைகளையும் பட்டியலிட்டார்.

அரசியல் கட்சிகளுக்கான பொது நிதி ஒதுக்கீடு, அரசியல் நன்கொடைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் மற்றும் நன்கொடை வழங்கத் தகுதியுள்ளவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை இந்த சட்ட மசோதாவில் முக்கிய அம்சமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை உருவாக்குவதற்காக அரசாங்கம், வணிக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதில் 12 கூட்டங்கள் மாநில அளவிலானவை ஆகும். இக்கூட்டங்களில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என மொத்தம் 1,544 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கலந்தாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த அரசியல் நிதி மசோதாவின் அடிப்படை விதிகளாக மாற்றப்படும் என்று துணை அமைச்சர் குலசேகரன் மேலும் விளக்கினார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்