May 6, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்
அரசியல்

அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

மலேசியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் நிதி மசோதாவின் கீழ், அரசியல் கட்சிகள் தங்களின் நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்ட சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் உரையாற்றிய குலசேகரன், இந்த மசோதாவில் இடம் பெறக்கூடிய இதர முக்கிய பரிந்துரைகளையும் பட்டியலிட்டார்.

அரசியல் கட்சிகளுக்கான பொது நிதி ஒதுக்கீடு, அரசியல் நன்கொடைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் மற்றும் நன்கொடை வழங்கத் தகுதியுள்ளவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை இந்த சட்ட மசோதாவில் முக்கிய அம்சமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை உருவாக்குவதற்காக அரசாங்கம், வணிக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதில் 12 கூட்டங்கள் மாநில அளவிலானவை ஆகும். இக்கூட்டங்களில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என மொத்தம் 1,544 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கலந்தாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த அரசியல் நிதி மசோதாவின் அடிப்படை விதிகளாக மாற்றப்படும் என்று துணை அமைச்சர் குலசேகரன் மேலும் விளக்கினார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி