Jan 26, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்
அரசியல்

அரசியல் நிதி மசோதா: நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படலாம் - எம். குலசேகரன்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

மலேசியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் நிதி மசோதாவின் கீழ், அரசியல் கட்சிகள் தங்களின் நிதி அறிக்கைகளை பொதுவெளியில் வெளியிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்ட சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் உரையாற்றிய குலசேகரன், இந்த மசோதாவில் இடம் பெறக்கூடிய இதர முக்கிய பரிந்துரைகளையும் பட்டியலிட்டார்.

அரசியல் கட்சிகளுக்கான பொது நிதி ஒதுக்கீடு, அரசியல் நன்கொடைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் மற்றும் நன்கொடை வழங்கத் தகுதியுள்ளவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை இந்த சட்ட மசோதாவில் முக்கிய அம்சமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை உருவாக்குவதற்காக அரசாங்கம், வணிக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதில் 12 கூட்டங்கள் மாநில அளவிலானவை ஆகும். இக்கூட்டங்களில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என மொத்தம் 1,544 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கலந்தாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த அரசியல் நிதி மசோதாவின் அடிப்படை விதிகளாக மாற்றப்படும் என்று துணை அமைச்சர் குலசேகரன் மேலும் விளக்கினார்.

Related News

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இனி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் அல்ல: தகவல் கசிந்தது

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இனி பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் அல்ல: தகவல் கசிந்தது

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டாரா முகைதீன் யாசின்?

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டாரா முகைதீன் யாசின்?

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

பெர்லிஸ் அரசியல் குழப்பம்: "நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே பரிந்துரைத்தோம், பாஸ் கட்சியில் தலையிடவில்லை" - பெர்சாத்து விளக்கம்!

பெர்லிஸ் அரசியல் குழப்பம்: "நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே பரிந்துரைத்தோம், பாஸ் கட்சியில் தலையிடவில்லை" - பெர்சாத்து விளக்கம்!

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்