சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் பிரதமர் டத்தோ' ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜெலுபுவில் உள்ள சென்னா தொகுதியில் மதிய தேநீர் விருந்துடன் தனது பயணத்தைத் தொடங்கவுள்ள அவர், தொடர்ந்து பரோயில் உள்ள இஸ்லாமிய தவாகா மையத்தில் நடைபெறும் தெமு அன்வார் நிகழ்ச்சியிலும், கிளானா ரிசார்டில் இந்தியச் சமூகம் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார்.
இரவு 9 மணிக்கு பெதாரியா வர்த்தக மையத்திலும், அதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு நீலாய் தேச செம்பாக்கா இரவு சந்தை பகுதியிலும் நடைபெறவுள்ள 'கெக்கல் ஹரப்பான் நெகிரி செம்பிலான்' இறுதி கட்டப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சிகளில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுட்தின் ஹாருன், ஜசீகா தேசியச் செயலாளர் அந்தனி லோக் மற்றும் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.








