சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் திரெங்கானு மாநில இளையோர்களுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை அறிவித்து இருப்பது மூலம் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தேர்தல் கோட்பாட்டை மீறியுள்ளார் என்று தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்கும் பெர்சிஹ் குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் காலத்தில் இது போன்ற நிதி ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் வழங்க முடியாது, அது நியாயமான செயலும் அல்ல என்று பெர்சேவின் தலைவர் தாமஸ் டன் கூறுகிறார்.
நாட்டின் துணைப்பிரதமர் என்ற முறையில் மக்களுக்கு நிதி அளிக்கவும், அவர்களுக்கு உதவவும் ஜாஹிட்டிற்கு உரிமையுள்ளது என்றும் அது குற்றம் ஆகாது என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி. ஆர்.எம் கூறியுள்ளது. உண்மைதான். இத்தகைய உதவிகளை செய்வதற்கு துணைப்பிரதமருக்கு உரிமையுண்டு. ஆனால், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் இக்காலகட்டத்தில் இத்தகைய நடைமுறைகளை அனுமதிப்பது தார்மீக அரசியல் நெறிமுறைகளுக்கு முரணானதாகும் என்று தாமஸ் டன் வாதிட்டுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


