கத்தாரில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோஹா-விலுள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது.
மேற்காசிய போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் சில நாடுகளுக்கு விடுத்துள்ள சமீபத்திய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மலேசியத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், கத்தார் ஆயுதப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்கும் என்றும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.
மேலும், கத்தார் ஆயுதப்படைகள் பல தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து, சேதத்தையும் உயிரிழப்புகளையும் குறைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








