Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய நீர் பகுதியில், ஈரானின் எண்ணெய்கள் கொண்டு செல்லப்படுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை! பிரதமர் கூறுகிறார்.
அரசியல்

மலேசிய நீர் பகுதியில், ஈரானின் எண்ணெய்கள் கொண்டு செல்லப்படுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை! பிரதமர் கூறுகிறார்.

Share:

டோஹா, மே 15-

அமெரிக்கா விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய்கள், மலேசிய நீர் பகுதியில், கப்பல்களிடையே மாற்றம் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்தார்.

மலேசியாவுக்கு அருகாமையிலுள்ள நீர் பகுதியில் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும், இதுவரையில் அதனை உறுதிபடுத்தக்கூடிய ஆதாரங்கள் ஏதும் இல்லை.

அத்தகைய நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆற்றலையும் மலேசியா கொண்டிருக்கவில்லை என நேற்று நடைபெற்ற கத்தார் பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பிரதமர் கூறினார்.

ஈரானின் எண்ணெய்களை கொண்டு செல்வதற்கான வசதியை, மலேசியா ஏற்படுத்தி தந்துள்ளதாக அமெரிக்கா வருத்தம் கொண்டுள்ளது தொடர்பில், நிகழ்ச்சி நெறியாளர் ஹஸ்லிந்தா ஆமின் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்