Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பக்காப் இடைத்தேர்தலில், IAB கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றார்.
அரசியல்

சுங்கை பக்காப் இடைத்தேர்தலில், IAB கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றார்.

Share:

பினாங்கு, ஜூன் 13-

பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக, அமினுதீன் பாக்கி கல்வி கழகத்தின் வடக்கு கிளை முன்னாள் இயக்குநர் ஜோஹரி அரிஃபின், வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளார்.

நேற்று இரவு நிபோங் தெபால்-லில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில், PKR கட்சி துணைத்தலைவர் ரஃபிஸி ராம்லி அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

60 வயதுடைய உள்ளூர்வாசியான ஜோஹரி-யை பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளராக களமிறக்குவதற்கு, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவம் இணக்கம் தெரிவித்திருப்பதாக, ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் பிரிவு இயக்குநருமான அவர் கூறினார்.

அதே நிகழ்ச்சியில், வேட்பாளர் நியமன நாளுக்கு முன்பதாக, தனது சொத்துகளை அறிவிக்க வலியுறுத்தும் உறுதிமொழி கடிதத்தில் ஜோஹரி கையெழுத்திட்டார்.

கடந்த மே மாதம் 24ஆம் தேதி, PAS கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப், உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து சுங்கை பக்காப் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வருகின்ற ஜூலை மாதம் 6ஆம் தேதி, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

Related News

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கம் சாட்டையடி கொடுக்க  வேண்டும்

பாஸ் கட்சிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கம் சாட்டையடி கொடுக்க வேண்டும்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

தேர்தல் பிரச்சார சர்ச்சை: கெடா மந்திரி பெசார் சனுசி மற்றும் அம்னோ தொகுதி தலைவர் விரைவில் போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல் களைகட்டியது: காலை 10 மணி நிலவரப்படி 34.26 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல்: முன்கூட்டியே வாக்காளர்களுக்கு வீரப்பன் பாராட்டு

நெகிரி செம்பிலான் தேர்தல்: முன்கூட்டியே வாக்காளர்களுக்கு வீரப்பன் பாராட்டு