Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸின் பராமரிப்புத் தரம் உயர்த்தப்படும்
அரசியல்

மலேசிய ஏர்லைன்ஸின் பராமரிப்புத் தரம் உயர்த்தப்படும்

Share:

கோலாலம்பூர், நவ.11-

மலேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட், விமானங்களின் நீண்ட காலம் ஆயுளையும், செயல்பாட்டு நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு பல உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான வழித்தடங்களுக்கான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

விமானங்களின் அதிக செயல்திறன் மிக்க பராமரிப்பை மேற்கொள்ளவும், விமானம் சேதமடையும் அபாயத்தை குறைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஏதுவாக சில வவழித்தடங்களுக்கான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.

நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸின் பாதுகாப்புத் தரங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படுவது மட்டுமின்றி, விமானங்களின் பராமரிப்பு அம்சங்களை வலுப்படுத்த பல விரிவான நடவடிக்கைகளின் வாயிலாக தற்போது பலப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர விமானங்களின் தொழில்நுட்ப சிக்கல்களுக்கான காரணங்களை கண்டறியவும், அவற்றை நிவர்த்தி செய்யவும், பாதுகாப்பு நடைமுறைகளையும், நெறிமுறைகளையும் மேம்படுத்தவும், மலேசிய ஏர்லைன்ஸிற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது துணை அமைச்சர் ஹஸ்பி ஹபிபொல்லா இதனை தெரிவித்தார்.

மலேசிய ஏர்லைன்ஸின் செயல்பாட்டுத்திறன்கள் கடந்த அக்டோபர் மாதம் வரையில் 80 விழுக்காடு வரை மேம்படுத்தப்பட்டு இருக்கும் விவரத்தையும் அவர் வெளியிட்டார். மேலும் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் உக்திகளில் ஒன்றாக மலேசிய ஏர்லைன்ஸ் புதிய விமானங்களை வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை