Jul 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை
அரசியல்

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, வேட்பாளர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்பட்டு தவறான தகவல்கள் பரப்பப்படும் டிஜிட்டல் சதி முயற்சிகள் நடைபெறக்கூடும் என்பதால், வாக்காளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.

மேலும், இத்தகைய போலி கணக்குகள் மூலம் தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சிக் கொடிகள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரப் பதாகைகள் சேதப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் ஏமாற்றமளிப்பதாகவும், இத்தகைய செயல்கள் ஆரோக்கியமான தேர்தல் பிரசாரத்துக்கு முரணான, காலாவதியான பிரசார உத்திகள் என்றும் ஃபஹ்மி ஃபாட்சில் விமர்சித்துள்ளார்.

அதேவேளையில், பொய்யான தகவல்கள் அல்லது தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை உள்ளடக்கிய பதிவுகளில் எத்தனை பதிவுகள் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த எம்சிஎம்சியின் அண்மைய விவரங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தல் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவது தங்களது சமூக வழிகாட்டி விதிமுறைகளை மீறுவதாக அனைத்து சமூக ஊடகத் தளங்களும் தெரிவித்துள்ளதையும் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்:  அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்: அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்