Dec 21, 2025
Thisaigal NewsYouTube
UPSR - PT3 தேர்வுகள் இனியும் தேவையில்லை
அரசியல்

UPSR - PT3 தேர்வுகள் இனியும் தேவையில்லை

Share:

கோலாலம்பூர், நவ. 11-


தொடக்கப்பள்ளியில் ஆறாம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வு மற்றும் இடைநிலைப்பள்ளியில் மூன்றாம் படிவ PT3 தேர்வு ஆகியவை இனியும் தேவையில்லை என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் இன்று திட்டவட்டடமாக தெரிவித்துள்ளார்.

அவ்விரு அரசாங்கத் தேர்வுகளை ரத்து செய்து இருக்கும் கல்வி அமைச்சின் முடிவு தீர்க்கமானதாகும். அந்த தேர்வுகளை மறுபடியும் கொண்டு வருவதற்கு கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கல்வி அமைச்சைப்பொறுத்தவரையில் அவ்விரு தேர்வுகளும் இனியும் அவசியமில்லை என்று கருதப்படுகிறது. குறிப்பாக தேசிய கல்வித் தத்துவம், அதன் தேசிய கோட்பாட்டு முதன்மை நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அவ்விரு தேர்வுகளும் இனியும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஃபாட்லினா சிடேக் விளக்கினார்.

அவ்விரு தேர்வுகளுக்கு பதிலாக பிபிஎஸ் எனப்படும் பள்ளியை அடிப்படையாக கொண்ட மதிப்பீட்டுத் தேர்வு முறைக்கு கல்வி அமைச்சு வழிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளி அளவிலான தேர்வு முறையைக்கொண்ட பிபிஎஸ் தேர்வை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் தற்போது கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் நிறைவின் போது ஃபாட்லினா சிடேக் இதனைத் தெரிவித்தார்

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்