Apr 20, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றம்: கலந்து ஆலோசிக்கப்படவில்லை
அரசியல்

அமைச்சரவை மாற்றம்: கலந்து ஆலோசிக்கப்படவில்லை

Share:

ஷா ஆலாம், நவம்பர்.08-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் இன்னும் இரண்டு மூன்று வாரத்தில் சீரமைப்பு நடக்கப் போவதாகக் கூறப்படுவது குறித்து எந்தவொரு கலந்து ஆலோசிப்பும் நடத்தப்படவில்லை என்று அமானா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

எனினும் அமைச்சரவையில் தங்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு மாற்றமும் நிகழுமானால், பிரதமர் எடுக்கக்கூடிய முடிவைத் தாங்கள் மதிப்பதாக முகமட் சாபு குறிப்பிட்டார்.

அமைச்சரவைச் சீரமைப்பு குறித்து பிரதமர் இதுவரையில் எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தவில்லை. அதே வேளையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைச் சீரமைப்பு செய்வதற்கு பிரதமருக்கு முழு உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான அமானா கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் முகமட் சாபு இதனைத் தெரிவித்தார்.

Related News

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

பாரிசான் நேஷனலில் கிம்மா முழு உறுப்பினராக இணைய வேண்டும்: ஜாஹிட்  ஹமிடி வலியுறுத்தல்

பாரிசான் நேஷனலில் கிம்மா முழு உறுப்பினராக இணைய வேண்டும்: ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தல்

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து