Oct 21, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுனர் ஒப்புதல்
அரசியல்

பினாங்கு சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுனர் ஒப்புதல்

Share:

15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் நாளை புதன்கிழமை கலைக்கப்படவிருக்கிறது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரஸாக் இன்று கையெழுத்திட்டார்.

மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக, இன்று காலை 8 மணியளவில், செரி முத்தியாராவில், பினாங்கு மாநில முதலமைச்சர் சொவ் கொன் யாவ், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸியை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பது தொர்பான பரிந்துரையை முன்வைத்ததுடன், சட்டமன்றத்தை நாளை புதன்கிழமை கலைப்பது தொடர்பான பிரகடனத்தில் ஆளுநர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சொவ் கொன் யாவ் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!