Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

கெடா மந்திரி பெசார் பகிரங்க மன்னிப்புக் கோரினார்

Share:

ஷா ஆலாம், பிப்.26-

தன்னைச் சிறுமைப்படுத்தியதாகக் கூறி, கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி நோருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடுத்த அவதூறு வழக்கு, நல்ல முறையில் தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஷா ஆலாம் உயர் நீதிமன்றதில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம், கெடா மந்திரி பெசார் சனூசி நோர், பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மன்னிப்போம், மறப்போம் என்ற அடிப்படையில் இரு மந்திரி பெசார்களுக்கு இடையில் நிலவி வந்த சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

எனினும் சனூசி கேட்டுக் கொண்டுள்ள மன்னிப்பின் உள்ளடக்கத்தை பொதுவில் வெளியிடுவதற்கு நீதிபதி ரோஸி பைனுன் மறுத்து விட்டார்.

சுங்கை கிள்ளான் ஆற்றின் தூய்மைப்பணி தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு அவதூறு ஏற்படுத்தும் தன்மையிலான சொற்களை கெடா மந்திரி பெசார் பயன்படுத்தியதாக அந்த சிவில் வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!