May 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!
அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் 'யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்' என்ற அடிப்படையில் களம் காணத் தயார் என அறிவித்துள்ள நம்பிக்கைக் கூட்டணி, தங்களின் மாநில முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும் என ஜோகூர் மாநில அம்னோ இளைஞர் அணி சவால் விடுத்துள்ளது. அரசாங்க மட்டத்தில் தேசிய முன்னணி – நம்பிக்கைக் கூட்டணி இடையே முறையான அதிகாரப் பகிர்வு இல்லாத நிலையில், வரும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதே குழப்பங்களைத் தவிர்க்கச் சரியான முடிவாக இருக்கும் என அந்நம்பிக்கைக் கூட்டணியின் ஜோகூர் மாநிலத் தலைவர் அமினோல்ஹூடா ஹசான் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஜோகூர் அம்னோ இளைஞரணித் தலைவர் நோர் அஸ்லின் அம்ப்ரோஸ், அம்னோவும் தேசிய முன்னணியும் எந்தவொரு சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், நம்பிக்கைக் கூட்டணி தங்களின் முதல்வர் வேட்பாளரை துணிச்சலாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது ஜோகூர் மாநில ஆட்சி தேசிய முன்னணி வசமுள்ள நிலையில், அடுத்த மாநிலத் தேர்தல் ஏப்ரல் 2027-க்குள் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி