அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் உறுதிபடுத்தியுள்ளார். 19 வேட்பாளர்களின் வேட்புமனுப்பாரங்கள் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூடா வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்வார்கள் என்று அமிரா ஐஸ்யா நம்பிக்கை தெரிவித்தார். இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மூடா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ், கோல குபு பாரு தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். மூடா கட்சியின் மற்றொரு வேட்பாளரான ஆர்.தனுஷா செந்தோசா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


