அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் உறுதிபடுத்தியுள்ளார். 19 வேட்பாளர்களின் வேட்புமனுப்பாரங்கள் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூடா வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்வார்கள் என்று அமிரா ஐஸ்யா நம்பிக்கை தெரிவித்தார். இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மூடா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ், கோல குபு பாரு தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். மூடா கட்சியின் மற்றொரு வேட்பாளரான ஆர்.தனுஷா செந்தோசா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


