விரைவில் நடைபெற விருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷனலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ஐடில்லடா பெருநாளுக்குப் பிறகு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இன்னும், ஓரிரு தொகுதிகள் மட்டுமே முடிவு செய்யப்படாத நிலையில், அவை விரைவில் முடிவுக்குக்கொண்டுவரப்படும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடீன் ஷாரி குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார் என்றும், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தாம் நம்புவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


