விரைவில் நடைபெற விருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷனலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் ஐடில்லடா பெருநாளுக்குப் பிறகு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இன்னும், ஓரிரு தொகுதிகள் மட்டுமே முடிவு செய்யப்படாத நிலையில், அவை விரைவில் முடிவுக்குக்கொண்டுவரப்படும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடீன் ஷாரி குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார் என்றும், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தாம் நம்புவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


