Apr 25, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் இல்லம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகும்
அரசியல்

பிரதமரின் இல்லம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வசித்து வரும் காஜாங்கில் உள்ள பங்களா வீடு 10 வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகும் என்று பிரதமரின் வழக்கறிஞர் எஸ்.என்.சங்கர நாயர்தெரிவித்துள்ளார்.

அந்த பங்களா வீட்டில் குடியிருப்பதற்கு 10 ஆண்டு காலத்திற்கு எடுக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தில் டத்தோஸ்ரீ அன்வாரே நேரடியாக கையெழுத்திட்டுள்ளார் என்று எஸ்.என்.சங்கர நாயர் விளக்கினார்.
அந்த குத்தகை வீட்டில்தான் அன்வார் வசித்து வருகிறார் என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் எஸ்.என்.சங்கர நாயர் இதனை தெரிவித்தார்.

அன்வாரின் காஜாங் வீடு தொடர்பாக அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அவரின் அரசியல் செயலாளர் பர்ஹான் பௌஸி இன்று போலீசில் புகார் செய்துள்ளார். அவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த வழக்கறிஞர் சங்கர நாயர் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

காஜாங், சுங்கை லோங் கில் உள்ள அன்வாரின் பங்களா வீடு யாருக்கு சொந்தம் என்பது மர்மமாக உள்ளது என்றும் அந்த வீடு ஒரு சீனருக்கு சொந்தம் என்று கூறப்படுகிறது என்றும் அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் பெர்சத்து கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் பத்ருல் ஹிஷாம் கூறியிருப்பது தொடர்பில் சங்கர நாயர் விளக்கம் அளித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!