ஜோகூர் பாரு, ஜூலை.11-
ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியின் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிகோல் டான் ஹியாங் கீ தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஜசெக கட்சியின் அனைத்துலக விவகாரச் செயலாளர் கஸ்தூரி பட்டு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையமும் போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று, SMK தாமான் துன் அமீனா இடைநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிக்கு முன்பாக நிகோல் டான் ஹியாங் கீக்குச் சொந்தமான வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் தேர்தல் பிரச்சாரப் பதாகைகள் மற்றும் கட்சியின் சின்னம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் கஸ்தூரி பட்டு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு அருகில் எந்தவொரு கட்சிச் சின்னத்தையோ பிரச்சாரப் பொருட்களையோ காட்சிப்படுத்துவது சட்டவிரோதமாகும்.
இத்தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிகோல் டான் ஹியாங் கீ, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் மற்றும் இதர வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டனர்.








