Sep 20, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பக்காத்தான் ஹராப்பானுக்குக் கிடைத்துள்ள ஆதரவு மிகவும் அபாரமானது!" கோபிந்த் சிங் டியோ நெகிழ்ச்சி!
அரசியல்

அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பக்காத்தான் ஹராப்பானுக்குக் கிடைத்துள்ள ஆதரவு மிகவும் அபாரமானது!" கோபிந்த் சிங் டியோ நெகிழ்ச்சி!

Share:

கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிரச்சாரக் களத்தில், அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குக் கிடைத்துள்ள பேராதரவு மிகவும் அபாரமானது என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்தும் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு உண்மையிலேயே மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் உள்ளது என்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இப்போது மிக மிக முக்கியமானது என்னவென்றால், வாக்காளர்கள் அனைவரும் தங்களின் சொந்தத் தொகுதிகளுக்குத் திரும்பி வந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் தங்களின் ஜனநாயகக் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும், நிலையான வளர்ச்சியையும் தீர்மானிக்கப் போவது உங்கள் ஒற்றை வாக்குதான்! எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் எவ்வித சுணக்கமுமின்றி, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்குத் தங்களின் வலுவான, அசைக்க முடியாத பேராதரவை வழங்கி, அவர்களை வரலாற்றுச் சிறப்புமிக்க அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்!

Related News