முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் நாட்டுக்கும் அம்னோ கட்சிக்கும் ஆற்றிய பங்களிப்புகளை தாங்கள் மறக்கவில்லை என்று அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மாற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்களுக்கான உதவிகளில் நஜிப்பின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை என்றும், கட்சியில் அவர் வகித்த பங்கும் நாட்டின் வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் வரலாற்றை அழிக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்ட நோராய்னி, அரசியல் மாறிவிட்டது என்பதற்காக அவரது பங்களிப்புகளை மறுக்க முடியாது என்று இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ மகளிர் பேரவையில் கொள்கை உரையாற்றிய போது தெரிவித்தார்.
மேலும், நஜிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








