விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என பக்கத்தான் ஹராப்பான் நம்புகிறது.
நடப்பு அரசு நிர்வாகம் மீது அதிகமான வாக்காளர்கள் திருப்தி கொண்டுள்ளதை ஹராப்பான் வசமுள்ள சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களில் மாதாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது என்று கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசாங்கம் மிக அதிகமாக அதாவது 75 விழுக்காட்டுப் புள்ளிகளை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது மக்கள் நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறீர்களா? அரசு நிர்வாகம் மீது திருப்தி கொள்கிறீர்களா என்ற இரு கேள்விகள் முன்வைக்கப்பட்டன என்று ரபிஸி அவர் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
