Jun 26, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசுக்குத் தலைமையேற்க தெங்கு ஸாஃப்ருல் பொருத்தமானவர்
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசுக்குத் தலைமையேற்க தெங்கு ஸாஃப்ருல் பொருத்தமானவர்

Share:

ஷா ஆலாம், ஜூன்.04

வர்ததகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், சிலாங்கூர் மந்திரி பெசாராக அந்மாநிலத்திற்குப் பொறுப்பேற்பதற்குப் பொருத்தமானவர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

தெங்கு ஸாஃப்ருல், ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்தவர் என்பதை தற்போது வகித்து வரும் பதவியின் மூலம் நிரூபித்துள்ளார். அவரின் ஆற்றலை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிகேஆர் கட்சியின் சமூக ஆர்வலர் ஃபைருல் அல்-காஸாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே தெங்கு ஸாஃப்ருல், சிலாாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவாரா? அல்லது அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராகப் போட்டியிடப் போகிறாரா? என்பதை ஒரு விவகாரமாக எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்று கோல கிராய் பிகேஆர் தொகுதியின் முன்னாள் தலைவரான ஃபைருல் அல்-கஸாஸ் குறிப்பிட்டார்.

Related News