Mar 7, 2026
Thisaigal NewsYouTube
வங்கிகளின் குறைபாடால் மோசடி நிகழ்ந்தால், வங்கிகளே பொறுப்பு
அரசியல்

வங்கிகளின் குறைபாடால் மோசடி நிகழ்ந்தால், வங்கிகளே பொறுப்பு

Share:

நவ. 27-

மலேசியாவில், வங்கிகளின் தவறு காரணமாக வாடிக்கையாளர்கள் மோசடியால் பணத்தை இழந்தால், அந்த இழப்பிற்கு அந்தந்த வங்கி முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என பிரதமர் துறையின் சட்டப் பிரிவுக்கானத் துணை அமைச்சர் M Kulasegaran தெரிவித்தார். இந்த சட்டம், வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஏதேனும் ஒரு மோசடி நடந்தால், வங்கிகள் அதைப் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது என அவர் கூறினார்.

இந்த சட்டத்தை நடப்புக்குக் கொண்டுவர, வங்கிகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதில், இணைய வங்கி, மொபைல் வங்கி போன்றவற்றில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பதும் அடங்கும். மேலும், மோசடிகளைத் தடுக்க ஒரு தேசிய மோசடி தடுப்புக்கான இணையத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் மூலம், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க உதவும் என குலசேகரன் குறிப்பிட்டார்.

மலேசியாவில், இது போன்ற மோசடி தொடர்பான பல புகார்கள் பெறப்படுகின்றன. இதற்காக, காவல் துற்றையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. தொலைத்தொடர்பு ஆணையம், மோசடிக்கு பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களைத் தடை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில், மோசடி தொடர்பான பல வழக்குகள் காவல் துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் மோசடி வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பண மோசடி தொடர்பான வழக்குகளிலும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு